TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 26 , 2022 883 days 454 0
  • 2022 ஆம் ஆண்டின் கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊழியர்களுடன் ஒன்றிணைவதற்கான சர்வதேச தினமானது மார்ச் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது.
    • இந்த தினமானது நடவடிக்கையைத் ஒன்று திரட்டவும், நீதியைக் கோரவும், ஐ.நா. அமைப்பின் ஊழியர்கள் மற்றும் அமைதி காக்கும் படையினர், அரசு சாரா சமூகம் மற்றும் பத்திரிகை நிறுவனங்களில் பணி புரியும் நமது சக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குமான நமது உறுதியை வலுப்படுத்துவதற்கான ஒரு தினமாகும்.
  • 2021-22 ஆம் நிதியாண்டில், திட்டமிடப்பட்ட இலக்கு காலத்தை விட முன்பாகவே சரக்கு ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர் என்ற இலக்கை இந்தியா அடைந்துள்ளது.
  • சர்வதேச சாதனையாளர் தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
    • இது சாதனையாளர்களையும் அவர்களின் வலுவான நோக்கம் மற்றும் நம்பிக்கை போன்றவற்றைக் கொண்டாடுவதற்கான ஒரு தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்