TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 29 , 2022 847 days 427 0
  • ஏழை மக்களுக்கு 5 கிலோ அளவில் உணவு தானியங்களை இலவசமாக வழங்கும் ஒரு திட்டத்தினை செப்டம்பர் 30 வரையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது தொடங்கப்பட்ட இத்திட்டமானது மார்ச் 31 அன்று முடிவடைய இருந்தது.
  • இந்தியாவில் முதல்முறையாக சிம்லா நகரில் மலையேற்ற சைக்கிள் போட்டி மற்றும் மோட்டார் பொருத்திய சைக்கிள் பந்தயம் போன்றவற்றிற்காக இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒரு சிறப்புத் தேசிய மையத்தினை விளையாட்டு அமைச்சகம் நிறுவ உள்ளது.
    • இமாச்சலப் பிரதேச அரசுடன் இணைந்து இது நிறுவப்படும்.
  • உக்ரைனில் மாஸ்கோ மேற்கொண்ட எதிர்பாராத படையெடுப்பு மற்றும் போர் நடவடிக்கையைத் தொடர்ந்து அந்தக் கண்டத்தின் முதன்மையான மனித உரிமைகள் அமைப்பிலிருந்து ரஷ்யாவினை ஐரோப்பியச் சபை வெளியேற்றியுள்ளது.
    • இதன் மூலம், இக்குழுவில் ரஷ்யாவின் 26 வருட உறுப்பினர் பொறுப்பு முடிவிற்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்