உள்கட்டமைப்பு, ஏலம் மற்றும் நிதிச் சேவைகள் என்ற வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக உதய் கோடக் அறிவித்துள்ளார்.
இந்த வாரியத்தின் மேலாண்மை இயக்குநரான C.S. ராஜன் என்பவரை அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக 6 மாத காலத்திற்கு நியமித்துப் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று, மக்களவையில் 2022 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலினப் பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) மசோதாவானது நிறைவேற்றப் பட்டது.
இந்த மசோதாவானது, திரிபுராவின் பட்டியலினப் பழங்குடியினர் பட்டியலிலுள்ள ‘குகி’ பிரிவினரின் கீழ் ‘டார்லோவ்’ என்ற சமூகத்தினரை ஒரு உட்பிரிவினராகச் சேர்ப்பதற்கு முன்மொழிந்துள்ளது.