TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 7 , 2022 837 days 456 0
  • நேபாள நாட்டிற்கான தற்போதைய இந்தியத் தூதரான வினய் மோகன் க்வாத்ரா என்பவரை இந்தியாவின் அடுத்த வெளியுறவுச் செயலாளராக இந்திய அரசு நியமித்து உள்ளது.
    • தற்போதைய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்களாவினையடுத்து இவர் இப்பதவியை ஏற்க உள்ளார்.
  • பருவநிலை மாற்றம் மீதான அரசுகளுக்கிடையிலான குழுமமானது இந்தியாவில் மலேரியாவின் இடம் சார்ந்த பரவலில் மாற்றங்களைக் கணித்துள்ளது.
    • தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களையும் சேர்த்து இமாலய மலைப் பகுதிகளிலும் அத்தொற்று ஏற்படக் கூடியதற்கான வாய்ப்புள்ளதையும் அக்குழுமம் எச்சரித்தது.
  • டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி நேரத்திற்குப் பிறகு, பாடத் திட்டங்களுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் பொழுதுபோக்கு திறன் மையங்களை டெல்லி அரசு நிறுவியுள்ளது.
    • இந்த கூடுதல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கு, பள்ளி நேரத்திற்குப் பிந்தைய நேரத்தில் இதனைப் பயன்படுத்தவும், பள்ளியின் உள்கட்டமைப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்காக வேண்டி இந்த நடவடிக்கையானது எடுக்கப் பட்டது.
  • தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுய உதவிக்குழுக்கள் இணைப்பில், சிறப்பாக செயல்படும் வங்கி என HDFC வங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் சுய உதவிக் குழுக்களுக்குப் பங்களிக்கச் செய்ததற்காக விருது வழங்கி கௌரவிக்கப்படும் ஒரே தனியார் வங்கி HDFC வங்கிகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்