April 13 , 2022
831 days
426
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிலிப்பாக்குட்டை என்னுமிடத்தில் அமைக்கப் பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தினைத் திறந்து வைத்தார்.
- பிலிப்பாகுட்டை பகுதியானது நாமக்கல் மாவட்டத்தின் நாமகிரிப்பேட்டை என்ற பஞ்சாயத்து ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
- பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் செபாஷ் செரீஃப், பாகிஸ்தானின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- 70 வயதான இவர் 3 முறை பிரதமராக பதவி வகித்த நவாஷ் செரீஃப் என்பவரின் இளைய சகோதரர் ஆவார்.
- டாக்டர் மனோஜ் சோனி என்பவர் மத்திய குடிமைப் பணி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
- இந்த ஆணையத்தின் முந்தைய தலைவர் பிரதீப் குமார் ஜோசி என்பவரையடுத்து இவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Post Views:
426