ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டின் WSF உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை அணியினரான தீபிகா பலிக்கல் கார்த்திக் மற்றும் சவுரவ் கோசல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
WSF உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
2023 ஆம் ஆண்டில் இந்திய நாட்டினால் நடத்தப்பட உள்ள G20 உச்சி மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளராக, வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதற்காக இந்தப் பதவியினை அரசு புதிதாக உருவாக்கியுள்ளது.
இந்தியக் கடலோரக் காவற்படையானது MK III எனப்படும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) அடங்கிய படைப் பிரிவு ஒன்றை நிறுவியுள்ளது.
இது கடல் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்.
உமியா மாதா கோவிலின் 14வது நிறுவன தினத்தன்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.
உமியா மாதா கோயிலானது குஜராத்தின் ஜூனாகத் என்னுமிடத்தில் உள்ள ஒரு சமயத் தலமாகும்.
சமையல் எண்ணெய் விற்பனை நிறுவனமான ருச்சி சோயா, தனது நிறுவனத்தின் பெயரை பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் என மாற்றுவதற்கு அந்த நிறுவனத்தின் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறியது.