இமாச்சலப் பிரதேசத்தில் 125 அலகுகள் வரையில் அம்மாநில மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப் படும் என்று அந்த மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்து உள்ளார்.
மேலும், அந்த மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் குடிநீர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியமானது இந்தியாவின் பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தைப் பாராட்டியுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது நாட்டில் அதிகரித்து வந்த தீவிர வறுமை மேலும் பரவுவதை இது தடுத்தது.