ஆயுஷ் சிகிச்சையைப் பயன்படுத்திப் பலன் பெறுவதற்காக வேண்டி இந்தியாவிற்கு வர விரும்பும் வெளிநாட்டினருக்கு சிறப்பு ஆயுஷ் நுழைவு இசைவு சீட்டு வழங்கும் ஒரு முறையை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது.
காந்தி நகரில் நடைபெற்ற உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டினைத் தொடங்கி வைக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இது குறித்து அறிவித்தார்.
குரு தேஜ் பகதூரின் 401வது பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
குரு தேஜ் பகதூர் முகலாயர்கள் காலத்தில் மேற்கொள்ளப் பட்ட கட்டாய மத மாற்றங்களை எதிர்த்துப் போரிட்டவரும் ஒன்பதாவது சீக்கிய குருவும் ஆவார்.