TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 26 , 2022 818 days 438 0
  • ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி என்ற கிராமம், கரிமச் சுழிய நிலையினை அடைந்த நாட்டின் முதல் பஞ்சாயத்து ஆக மாறியது.
    • இந்தக் கிராமமானது, முழுவதுமாக சூரிய சக்தியால் இயங்குகிறது.
  • இலங்கை நாடு எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்கு உதவுவதற்காக இந்தியா கூடுதலாக 500 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க உள்ளது.
    • இது இலங்கை அரசு பெட்ரோலியம் கொள்முதல் செய்வதற்கு இந்தியா வழங்கிய இரண்டாவது 500 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனாகும்.
  • இலங்கை மிகவும் மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால்,  அதன் 51 பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த இயல வில்லை.
    • இறக்குமதிக்கான அன்னியச் செலாவணி முழுவதுமாக தீர்ந்து விட்டதை அடுத்து இந்த அறிவிப்பானது விடுக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்