மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆற்றியப் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னை - மகாபலிபுரம் கிழக்குக்கடற்கரைச் சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தார்.
சென்னை மாநகராட்சியானது சென்னையில் உள்ள ஒரு தெருவிற்கு மறைந்த நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான விவேக் அவர்களின் பெயரை சூட்டியுள்ளது.
அவர் வாழ்ந்த வீடு உள்ள சென்னை விருகம்பாக்கம் தெருவிற்கு சின்னக் கலைவாணர் விவேக் சாலை எனப் பெயரிடப் பட்டுள்ளது.
பொதுப் பிரிவினரின் கடைசி மதிப்பெண்ணைவிட அதிக மதிப்பெண்கள் பெறும் இட ஒதுக்கீடுப் பிரிவினைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு/பதவியைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2022 ஆம் ஆண்டு செமிகான் இந்தியா என்ற மாநாட்டினைத் தொடங்கி வைக்க உள்ளார்.
மூன்று நாட்கள் வரை நடைபெறும் இந்த மாநாட்டினைப் பெங்களூரு ஏற்பாடு செய்கிறது.