மணிப்பூர் மாநிலத்தில் வாழும் பௌமாய் பழங்குடியினர், போதைப் பொருளுக்கு எதிரான அம்மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக, பௌமாய் மக்கள் வசிக்கும் பகுதிகள் போதைப் பொருள் இல்லாத ஒரு மண்டலமாக திகழும் என்று அறிவித்துள்ளனர்.
மே 09 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதன் மதிப்பிழப்பினை அதிகரித்து வரலாறு காணாத அளவில் 77.42 என்ற குறைந்த மதிப்பினைத் தொட்டது.
இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே மே 09 ஆம் தேதியன்று ராஜினாமா செய்ததையடுத்து, இலங்கை அரசியலமைப்பின் படி அந்நாட்டு அமைச்சரவை கலைக்கப் பட்டது.
இந்தியக் கிராண்ட்மாஸ்டர் D.குகேஷ், புன்டா ப்ரைமாவில் நடைபெற்ற முதலாவது செசபிள் சன்வே ஃபார்மென்டெரா ஓபன் செஸ் போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றார்.
இது இவர் பெற்ற தொடர்ச்சியான மூன்றாவது (ஹாட்ரிக்) பட்டம் ஆகும்.
லார்சன் & டியூப்ரோ குழுமத்தின் கீழான பட்டியலிடப்பட்ட இரண்டு சுயாதீன தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களான L&T இன்போடெக் மற்றும் மைண்ட் ட்ரீ ஆகியவை இந்தியாவின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை வழங்கு நிறுவனமாகத் திகழ உள்ள ஒரு மாபெரும் நிறுவன இணைப்பு குறித்து அறிவித்தது.
இந்த ஒருங்கிணைந்த நிறுவனமானது, "LTIMindtree" என்று அழைக்கப்படும்.