ப்ரீத்தி ஷெனாய் “A Place Called Home” என்ற புதிய நாவலை வெளியிட உள்ளார்.
இந்தப் புதிய நாவல் ‘இரகசியங்கள், குடும்பம் மற்றும் சுய தேடல்’ ஆகியவற்றைப் பற்றியது ஆகும்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், லடாக்கின் லே நகரில் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கழக (NIELIT) மையத்தைத் திறந்து வைத்தார்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வாரியமானது கோபால் விட்டல் என்பவரை, அதன் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மேலும் ஐந்து ஆண்டுக் காலத்திற்கு மீண்டும் நியமித்துள்ளது.
டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் தனது பதவி விலகல் கடிதத்தினை ஒப்படைத்தார்.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் உணவுப் பிரிவினை, சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ருச்சி சோயா கையகப்படுத்த உள்ளது.
பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், 'Civil List – 2022 of IAS officers' என்ற புதிய இணையப் புத்தகத்தினை வெளியிட்டார்.
துருக்கியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் வெற்றி பெற்று உள்ளார்.
இவர் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஐந்தாவது இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.