தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் ஒரு இடைக்காலத் தலைவராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி C. முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக, ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு வரையில் உப்புநீரை நன்னீராக்கும் ஆலையானது குஜராத்தின் பருச் மாவட்டத்தில் திறக்கப் பட்டுள்ளது.
பாரதிய ஏர்டெல் நிறுவனமானது பார்ட்டிநைட் மெட்டாவர்ஸ் தளத்தில் இந்தியாவின் முதல் பன்மைய ஒளிபரப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
ராம் பகதூர் ராய் எழுதிய ‘பார்த்திய சம்விதான்: அங்கஹி கஹானி’ என்ற புத்தகத்தை பிரதமர் அவர்கள் வெளியிட்டார்.
இங்கிலாந்தின் மாட் ஃபிட்ஸ்பேட்ரிக் அமெரிக்க கோல்ப் ஓபன் போட்டியினை வென்று தனது முதல் உயரியப் பட்டத்தைக் கைப்பற்றினார்.
நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 37 பேர் கொண்ட இந்தியத் தடகள வீரர்களின் அணிக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா தலைமை தாங்க உள்ளார்.
உலகம் முழுவதும் சர்வதேச சுற்றுலா தினமானது ஆண்டுதோறும் ஜூன் 18 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.