சர்வதேச அளவில் போட்டித்திறன் மிக்க ஏலத்திற்காக 10 எண்ணெய்க் கிணறுகளை வழங்குவதற்கு, அனைத்து நிறுவன திறந்தநிலை நில உரிமத் திட்டத்தின் எட்டாம் கட்ட ஏலத்தினை அரசாங்கம் தற்போது தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் பிர்மிங்காம் நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு உலக வில்வித்தை விளையாட்டுப் போட்டியில் அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா வெண்ணம் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.
மேற்கு இரயில்வே நிர்வாகமானது மும்பையில் கர் ரோடு இரயில் நிலையத்திலிருந்து அருகிலுள்ள பாந்த்ரா முனையம் வரை மிக நீளமான இணைப்பு கொண்ட மேம்பால நடைபாதையினை (314 மீ) திறந்துள்ளது.
சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் (IFAD) ஆனது ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த அல்வாரோ லாரியோ என்பவரை நான்காண்டுக் காலத்திற்கு அதன் புதிய தலைவராக நியமித்துள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான பிரத்தியேக இசை ராகத்தினை எழுதிய பிரிட்டிஷ் இசையமைப்பாளர் மான்டி நார்மன் சமீபத்தில் காலமானார்.
இந்தியாவின் முதல் மிக உயர்ந்த நகர்ப்புற விரைவுவழிச் சாலையான, டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களை இணைக்கும் துவாரகா விரைவுச் சாலை, 2023 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும்.