பஞ்சாபைச் சேர்ந்த பிரபல கஜல் பாடகர் பூபிந்தர் சிங் சமீபத்தில் மும்பையில் காலம் ஆனார்.
ஒரு புதிய சுழல்முறை முன்னெடுப்பின் கீழ் 2022-23 ஆம் ஆண்டிற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது "கலாச்சார மற்றும் சுற்றுலாத் தலைநகரமாக" வாரணாசி மாறியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைக் கேரளாவினைச் சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர் பெற்றுள்ளார்.
தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி இணைப்புத் திட்டத்தின் கீழ், 2021-22 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் சிறப்பாகச் செயல்படும் வங்கி என்ற விருதை இந்தியன் வங்கி பெற்றுள்ளது.