பெங்களூரு, குஜராத், புது டெல்லி மற்றும் போபால் ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் 5G வலையமைப்பினை நிறுவி அதனை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிசோதித்து வருகிறது.
ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணம் மற்றும் பணி முகமைக்கு இந்தியா 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் யோசெமிட்டி என்ற தேசியப் பூங்காவிற்கு அருகே ஏற்பட்ட ஒரு காட்டுத் தீயானது கட்டுப்பாட்டை மீறி கொழுந்து விட்டு எரிந்தது.
இது இந்த ஆண்டில் ஏற்பட்ட கலிபோர்னியாவின் மிகப்பெரிய காட்டுத் தீ நிகழ்வில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரேக்க-ரோமன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சூரஜ் வசிஷ்த் தனது முதலாவது தங்கப் பதக்கத்தினை வென்றார்.
பி.வி.சிந்து மற்றும் இந்திய ஆடவர் ஹாக்கி அணித் தலைவர் மன்பிரீத் சிங் ஆகியோர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏந்தி அணியை வழி நடத்திச் செல்ல உள்ள வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.