சஞ்சுக்தா தாஷ் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பான 'லாக் டவுன் லிரிக்ஸ்' என்ற ஒரு புத்தகத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார்.
ஐரோப்பியக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தனது முதல் மகளிர் கால்பந்துப் பட்டத்தை வென்றது.
2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான நான்கு பேர் கொண்ட அணிகளுக்கான போட்டிகளில் இந்திய லான் பவுல்ஸ் அணி தங்கப் பதக்கத்தினை வென்றது.
இந்த விளையாட்டுப் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.