உத்தரப் பிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக முன்னேற்ற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான ஒரு முயற்சியில் டெலாய்ட் இந்தியா என்ற நிறுவனத்தினை ஒரு ஆலோசக நிறுவனமாக நியமிப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உத்தரப் பிரதேச அரசு கையெழுத்திட்டது.
முன்னாள் அரசுமுறை அதிகாரியான ஷியாம் சரண் ‘How China Sees India’ என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கலப்பு குழு பிரிவிற்கான போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஆடவருக்கான ஒற்றையர் மேசைப் பந்தாட்டப் போட்டியில் இந்திய வீரர் ஷரத் கமல் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் இரட்டையர் இணை அணியினரான சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் பூப்பந்து (பாட்மிண்டன்) போட்டியில் இந்தியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தினை வென்றனர்.