சோமாட்டோ நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஒரு தளவாடத் தொழில்நுட்பத் தளமான சிப்ராக்கெட் 33.5 மில்லியன் டாலர் வருவாயினை எட்டியதையடுத்து இந்தியாவின் 106 வது யூனிகார்ன் நிறுவனமாக மாறியது.
2வது வடகிழக்கு ஒலிம்பிக் போட்டியினை மேகாலயா மாநில அரசு நடத்த உள்ளது.
முதலாவது வடகிழக்கு இந்திய விளையாட்டுப் போட்டிகள் 2018 ஆம் ஆண்டில் மணிப்பூரில் நடைபெற்றது.
ரஷ்யாவில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு வோஸ்டாக் உத்திசார் படைப்பிரிவு மற்றும் பணியாளர் பயிற்சியில் சீனா பங்கேற்க உள்ளது.
இந்தப் பயிற்சியில் இந்தியா, பெலாரஸ், தஜிகிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் இராணுவப் படைகளும் பங்கேற்க உள்ளன.
2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர்களுக்கான மும்முறை தாண்டல் போட்டியில் இந்தியாவின் எல்தோஸ் பால் தனது முதல் தங்கப் பதக்கத்தினை வென்று வரலாற்றைப் படைத்துள்ளார்.