முழுவதும் தானியங்கு முறையில் சிறப்பாகச் செயல்படும் ஆய்வகம் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையினை பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
ஹரியானாவின்பரிதாபாத் நகரில் கட்டப் பட்ட அம்ரிதா மருத்துவமனை மாதா அம்ரிதானந்தா மயி மடத்தின் மூலம் நிதி அளிக்கப் படுகின்றது.
உத்தரப் பிரதேச அரசு இந்தியாவில் முதல்முறையாக அம்மாநிலத்தில் ஒரு கல்வி நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
'ஒற்றை நுழைவு, பல வெளியேறும் வழி' என்ற ஒரு கருத்தாக்கத்தில் இந்த கல்வி நகரமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
பேரிடரினைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணியை (CDRI) ஒரு ‘சர்வதேச அமைப்பாக’ வகைப்படுத்துவதற்கு வேண்டி மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.