TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 30 , 2022 692 days 375 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் தொழிலாளர் நலத் துறை அமைச்சர்களின் தேசிய மாநாடு நடைபெற்றது
  • உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை நடவடிக்கைகள் ஆனது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
    • 71 ஆண்டு கால நீதிமன்ற வரலாற்றில் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
  • முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியா சார்பான புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமானது, பாரத் எரிவாயு வள நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கழக நிறுவனம் ஆகியவற்றினை ஒன்றாக இணைக்கச் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்