தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவானது, லடாக்கில் ஒரு புதிய விமானப் படைத் தளத்தை நிறுவுவதற்காக இந்திய விமானப்படைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய விமானப் படையின் புதிய விமானத் தளமானது மெய்க் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு வெளியே அமைந்த சாங்தாங் சரணாலயப் பகுதியில் நிறுவப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுயெல்லா பிராவர்மேன் ஐக்கிய இராஜ்ஜியத்தின் புதிய உள்துறைச் செயலராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி படேலுக்குப் பதிலாக சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.