25 வயதான பருவநிலை ஆர்வலரான வனேசா நகேட் என்பவர் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய மாநாட்டின் முதலாவது அமர்வான உயர்மட்ட அமைச்சர்கள் கூட்டமானது சமீபத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழான ஒரு மாபெரும் அளவிலான உயர் இரத்த அழுத்த இடையீட்டு நடவடிக்கையான ‘இந்திய உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு முன்னெடுப்பு (IHCI)’ என்பதற்காக இந்தியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விருது என்பது வழங்கப் பட்டுள்ளது.