தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் மேற்கொள்ளப்படும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் தேதியன்று சர்வதேச இணைய தினம் கொண்டாடப் படுகிறது.
தடிப்புத் தோல் அழற்சி நோய் மற்றும் அதன் சிகிச்சை தொடர்பான முக்கியத் தகவல்களை பொது மக்கள் அறிந்து கொள்ள செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் தேதியன்று உலக தடிப்புத் தோல் அழற்சி நோய் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "தடிப்புத் தோல் அழற்சி நோயைக் குறைத்தல்" என்பதாகும்.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் நிகழ்ச்சியான ‘2022 ஆம் ஆண்டு இந்திய நகர்ப்புற வீட்டுவசதி மாநாட்டினை' பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இமாச்சலப் பிரதேசத்தின் உனா எனுமிடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தியத் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தை (IIIT) பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் இந்தியப் பிரதிநிதியான ஷெபாலி ஜுனேஜா, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விமானப் போக்குவரத்து அமைப்பின் விமானப் போக்குவரத்துக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை எதிர்க்கும் உத்தியாக 2024 ஆம் ஆண்டிற்குள், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசியப் புலனாய்வு முகமை அலுவலகங்கள் நிறுவப்பட உள்ளன.
2022 ஆம் ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தியது.