விப்ரோ ஒரு ஐரோப்பியப்பணிக் குழுவை (EWC) அமைப்பது தொடர்பாக தொழிலாளர் பிரதிநிதிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது.
விப்ரோவின் EWC என்ற குழுவின் உருவாக்கம் இந்தியாவில் தலைமையகத்தை கொண்ட ஒரு நிறுவனத்தால் நிறுவப்படும் முதல் அமைப்பாகும்.
சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் (ITTF) தடகள ஆணையத்திற்கு இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை நட்சத்திர இந்திய வீரர் அச்சந்தா ஷரத் கமல் பெற்றுள்ளார்.
இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தடகள ஆணையத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
லான்ஸ் நாயக் மஞ்சு, 10,000 அடி உயரத்தில் மேம்படுத்தப் பட்ட ஹெலிகாப்டர் (ALH) துருவ் என்பதில் இருந்து குதித்த இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஸ்கைடைவர் ஆனார்.
இந்திய ராணுவம் 242வது ராணுவப் பொறியாளர்கள் தினத்தை நவம்பர் 18ஆம் தேதி கொண்டாடுகிறது.
ராணுவப் பொறியாளர்கள் அமைப்பில் மதராஸ், வங்காளம் மற்றும் பாம்பே என்ற மூன்று குழுக்கள் 1932 ஆம் ஆண்டு 18 நவம்பர் அன்று ராணுவத்தில் இணைக்கப்பட்டன.
தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற ஆசிய ஏர் கன் சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த ஷிவா நர்வால் தங்கப் பதக்கம் வென்றார்.
முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா, சந்தியா தேவநாதனை நாட்டின் புதிய உயர் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
முன்னதாக, நாட்டின் முன்னாள் தலைவர் அஜித் மோகனை உடனடியாக பணியில் இருந்து விலக்குவதாக மெட்டா அறிவித்தது.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் நைனிடாலில் இருந்து ஹல்த்வானிக்கு மாற்றப்பட உள்ளது.
2000 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு ஒரு நாள் கழித்து நைனிடாலில் உயர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.