TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 19 , 2023 549 days 270 0
  • மத்தியப் பிரதேசத்தின் உயர் இலட்சியமிக்க மாவட்டமான விதிஷா, புத்தொழில் நிறுவனங்கள் வழங்கும் புதுமை மிக்க 5G பயன்பாடுகளை நேரடியாக அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியது.
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி மற்றும் ஆளில்லா விமான நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் ஆகியவை இணைந்து 'ட்ரோனி' என்ற ஆளில்லா கண்காணிப்பு விமானத்தினை அறிமுகப்படுத்தியுள்ளன.
  • இத்தாலிய மனிதர் ஒருவர் 81 புத்தகங்களின் பிரதிகளைப் பின்னோக்கி முறையில்  தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
    • இந்த நுட்பம் 'கண்ணாடிப் பிம்ப எழுத்து முறை' என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்