TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 20 , 2023 427 days 240 0
  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப நபர் சார்ந்த ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப் படியை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
  • விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெருங்குடல் புற்றுநோய் பற்றியத் தகவல்கள் அடங்கிய சிறு புத்தகத்தினை தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
  • தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 உழவர் சந்தைகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள் இனிமேல் இயற்கை உணவுப் பொருட்களைப் பிரத்தியேகமாக விற்பனை செய்ய உள்ளன.
  • கல்வியாளரான மனோஜ் சோனி மத்தியக் குடிமை பணிகள் ஆணையத்தின் (UPSC) தலைவராகப் பதவியேற்றுள்ளார்.
  • பிரணீத் வுப்பலா தெலுங்கானாவின் ஆறாவது மற்றும் இந்தியாவின் 82வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
  • இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான சமுத்திர சக்தி-23 எனப் படும் இருதரப்புப்  பயிற்சியானது சமீபத்தில் இந்தோனேசியாவில் தொடங்கியது.
  • நேபாள மலையேறும் நிபுணரான பசாங் தாவா ஷெர்பா 26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பதோடு, இந்தச் சாதனையினைப் படைத்த உலகின் இரண்டாவது நபர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
  • ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப் பட்டுள்ளார்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வு முகமையானது, அதன் அடுத்தத் தலைமை இயக்குநராக திருமதி எமி E.போப் என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்