TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 30 , 2023 325 days 235 0
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழ் மொழியில்  மொழிபெயர்ப்பதற்காக மாநில அலுவல் மொழி (சட்டமன்ற) ஆணையத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • செயற்கை நுண்ணறிவுக்கான நெறிமுறைகள் (AI) குறித்த யுனெஸ்கோ அமைப்பின் பரிந்துரையைச் செயல்படுத்துவதற்காக வேண்டி தெலுங்கானா மாநில அரசு மற்றும் யுனெஸ்கோ அமைப்பு ஆகியவை இணைந்து செயல்பட உள்ளன.
  • பாரத மிகு மின் நிறுவனமானது (BHEL) அனல் மின் நிலையங்களில் இருந்து வெளிவரும் NOx உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்காக வேண்டி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட SCR வினையூக்கிகளின் முதல் தொகுதியினை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது.
  • HDFC வங்கி மற்றும் மெரியோட் பான்வாய் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் முதல் முறையாக இணை நிறுவனத் தங்கும் விடுதி கடன் அட்டை - 'மெரியோட் பான்வாய் HDFC வங்கி கடன் அட்டையினை' அறிமுகப் படுத்தியுள்ளன.
  • மத்திய ஆலோசனைக் குழுவானது உணவு வணிக நிறுவனங்களுக்கு (FBOs) தற்போது வழங்கப் பட்டு வரும் ஓராண்டு உரிமத்திற்குப் பதிலாக ஐந்து ஆண்டுகள் வரை உரிமம் வழங்கப்படலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று தேசிய சிறுதொழில் தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்