TNPSC Thervupettagam

மாணவர் காவல்துறை படைப்பயிற்சி திட்டம்

July 24 , 2018 2191 days 642 0
  • மத்திய உள்துறை அமைச்சர் தேசிய அளவில் ‘மாணவர் காவல்துறை படைப்பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
  • இத்திட்டம் எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குற்றத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (Crime Prevention and Control), விழுமியங்கள் மற்றும் அறநெறிகள் (Ethics and Values) ஆகிய இரு தலைப்புகளைக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் மாநில அளவில் உள்துறைக்கான முதன்மைச் செயலாளர் தலைமையிலான குழுவின் கீழ் செயல்படும். இக்குழுவில் கல்வித் துறைக்கான முதன்மைச் செயலாளர் மற்றும் காவல்துறையின் பொது இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
  • இதே போன்ற குழு மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்படும். அக்குழுவில் மாவட்டப் பள்ளிகளின் ஆய்வாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்