TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 27 , 2023 267 days 257 0
  • கடலூரில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் சிலையினைத் தமிழக அரசு திறந்து வைத்துள்ளது.
  • பெண்களையும் கோவில் கருவறையில் பூஜை செய்வதற்கு அனுமதித்த செங்கல்பட்டு மாவட்டத்தின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் (82) சமீபத்தில் காலமானார்.
  • ஸ்விகி, சோமாட்டோ, ஓலா, ஊபர் மற்றும் ராப்பிடோ உள்ளிட்ட இணையம் மூலமாக திரட்டப்பட்ட ஊழியர்களின் நலன் கருதி குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் பயன் பெறும் வகையில் அவர்களைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்த இந்தியாவின் முதல் மாநிலமாக ஜார்க்கண்ட் உருவெடுத்துள்ளது.
  • போபாலின் மகிளா தானா காவல் நிலையமானது, ISO (சர்வதேச தரநிலைப்படுத்தல் அமைப்பு) அமைப்பின் தரச் சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் மகளிர் காவல் நிலையமாக மாறியுள்ளது.
  • சீனாவிலுள்ள ஹாங்சோ நகரில் நடைபெறும் 4வது ஆசிய மாற்றுத் திறனாளிகள் நபர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 303 தடகள வீரர்கள் உட்பட 446 பேர் கொண்ட அணியானது இந்தியாவின் சார்பாக கலந்துகொள்கிறது.
  • மத்திய அரசானது திறன் இந்தியா திட்டத்தின் தொடர்ச்சியாக 2023-24 ஆம் ஆண்டிற்கான திறன் இந்தியா போட்டியினை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்ததோடு,  2022 ஆம் ஆண்டு உலகத்திறன் போட்டியின் வெற்றியாளர்களுக்கு புது டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
  • ‘விமானங்களின் சரியான நேர செயல்திறன் குறித்த மாதாந்திர அறிக்கையின்படி’, பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையமானாது (KIA) “உலகிலேயே மிக சரியான நேரத்தில் இயங்கும் விமான நிலையமாக” கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்