TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 13 , 2023 219 days 172 0
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பானது, சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு 604 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
    • அந்நியச் செலாவணி இருப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று $600 பில்லியன் மதிப்பிற்கு மேல் இருந்தது.
  • ஃபெடரல் வங்கியானது, தி பேங்கர் என்ற பத்திரிக்கையின் "ஆண்டின் சிறந்த வங்கி (இந்தியா)" என்ற பட்டத்தினைப் பெற்றுள்ளது.
  • மோசமான காற்றுத் தரத்துடன், பாகிஸ்தானின் லாகூர் நகரம் உலகளாவிய மாசுக் குறியீட்டில் முதலிடம்  பிடித்தது.
  • தேசியத் தூய்மை கங்கை மற்றும் மிசிசிப்பி நதி நகரங்கள் மற்றும் சிறு நகரங்கள் இயக்கம் (MRCTI) ஆனது துபாயில் நடைபெற்று வரும் 28வது பங்குதாரர்கள் மாநாட்டில் பொது நோக்கத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
    • நகர்ப்புற நதி மேலாண்மை தொடர்பான பிரச்சனைகளில் ஒத்துழைப்பு வழங்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்