TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 16 , 2024 185 days 199 0
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளி விவரப்படி, நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது.
  • ஸ்வச் சர்வேக்சன் மதிப்பீட்டில் இடம் பெற்ற 446 இந்திய நகரங்களில் சென்னைப்\ பெருநகர மாநகராட்சி 199வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • சென்னை சங்கமம் ‘நம்ம ஊரு திருவிழா’வைத் தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
    • இந்த விழாவில் நகரம் முழுவதும் 18 இடங்களில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களின் நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப் படுகின்றன.
  • கடல் மீது கட்டமைக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் துறைமுகம் இடையிலான 22 கி.மீ. நீள அடல் சேது நவா ஷேவா கடல்சார் போக்குவரத்து இணைப்பு என அதிகாரப்பூர்வ பெயர் கொண்ட நாட்டின் மிக நீளமான கடல் மேல் அமைந்த பாலம் ஆனது சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • இந்திய இராணுவம் ஆனது, 2024 ஆம் ஆண்டினை 'தொழில்நுட்ப உட்சார்தல் ஆண்டாக' அனுசரிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்