TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 14 , 2024 156 days 190 0
  • கடற்பாசி சாகுபடியை ஊக்குவிப்பதற்கான தேசிய மாநாடு ஆனது குஜராத் மாநிலம் கட்ச் நகரில் நடைபெற்றது.
  • டாடா அறக்கட்டளை நிறுவனமானது இந்தியாவின் முதல் அதிநவீன சிறிய விலங்குநல மருத்துவமனையை மும்பையின் மகாலக்ஷ்மி நகரில் தொடங்க உள்ளது.
  • டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (AIIMS) ஆனது, மார்பகம் மற்றும் கருப்பைப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவும் iOncology.ai. எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா சேவைக் கழகம் ஆனது, சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இராமாயணச் சுற்று வட்டாரச் சுற்றுலாச் சேவை இரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இந்த 18 நாட்கள் அளவிலான பயணம் ஆனது டெல்லியில் இருந்து தொடங்கி, அயோத்தி, ஜனக்பூர் (நேபாளம்), சீதாமர்ஹி, வாரணாசி, நாசிக், இராமேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களை உள்ளடக்கியதாகும்.
  • உலக வங்கியின் தளவாடங்கள் செயல்திறன் குறியீட்டு அறிக்கையில் (2023) இடம் பெற்ற 139 நாடுகளில் இந்தியா 38வது இடத்தினைப் பெற்றுள்ளது.
    • இப்பட்டியலில் இந்தியாவின் தரநிலையானது 2018 ஆம் ஆண்டில் 44வது இடத்தில் இருந்து ஆறு இடங்களும், 2014 ஆம் ஆண்டில் 54வது இடத்தில் இருந்து பதினாறு இடங்களும் முன்னேறியுள்ளது.
  • 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.
    • வடகிழக்கு மாநிலங்களுள் இந்த முடிவை அமல்படுத்திய முதல் மாநிலம் இதுவாகும்.
  • கூகுள் நிறுவனமானது பார்டு எனப்படும் தனது செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருளின் பெயரை ஜெமினி என மாற்றியுள்ளது.
  • துபாய் நாடானது 2024 ஆம் ஆண்டு உலக அரசாங்கங்களின் உச்சி மாநாட்டினை ‘எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல்’ என்ற கருத்துருவின் கீழ் நடத்தியது.
    • அது இந்தியா, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை அந்த மாநாட்டின் கௌரவ விருந்தினர்களாக நியமித்தது.
  • நார்வேயின் டெலினர் நிறுவனமானது, அண்டார்டிகாவில் உலகின் தென்கோடியில் அமைந்த தொலைபேசி சேவை வழங்கீட்டு நிலையத்தினைத் தொடங்கியுள்ளது.
    • இது முதல் முறையாக முழுவதும் உறைந்த இந்த கண்டத்தின் ஒரு முனையில் தொடர் தொலைபேசி தொடர்பு சேவைகளைக் கொண்டுவருகிறது.
  • வங்க தேசத்தில் நடந்த SAFF 19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டித் தொடரின் கூட்டு வெற்றியாளர்களாக இந்தியா மற்றும் வங்காளதேசம் அறிவிக்கப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்