TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 18 , 2024 152 days 185 0
  • திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள மலையாளிப் பழங்குடியினத்தைச் சேர்ந்த 23 வயது பெண் V.ஸ்ரீபதி, தனது சமூகத்திலிருந்து முதல் உரிமையியல் நீதிபதியாக தேர்வு பெற்று வரலாறு படைத்துள்ளார்.
  • பர்கூர் கால்நடை ஆராய்ச்சி நிலையம் ஆனது பர்கூர் இனத்தைக் காத்ததற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் தேசிய விலங்கின மரபணு வள வாரியத்தின் (NBAGR) பெரிய அசை போடும் கால்நடைகள் பிரிவில் (நிறுவனங்கள்) மூன்றாவது இடத்தைப் பெற்றது.
  • 2026 ஆம் ஆண்டில் தேர்தல் தொகுதிகளை மறுசீரமைப்பதற்கான திட்டமிடப்பட்ட எல்லை மறுநிர்ணய நடவடிக்கை மற்றும் மத்திய அரசினால் முன்மொழியப்பட்ட "ஒரு நாடு, ஒரு தேர்தல்" கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றம் ஆனது இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
  • மத்திய நீர் வளத் துறை அமைச்சகமானது, கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறு பயன்பாட்டில் மேற்கொண்ட சிறந்த பல்வேறு முயற்சிகளுக்காக நொய்டா என்ற நகரத்தினை "சிறந்த தண்ணீர் போராளி" நகரமாக அறிவித்து கௌரவித்துள்ளது.
  • முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
  • இந்தியாவின் முன்னணி ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் வீரர் சுமித் நாகல் தனது சென்னை ஓபன் சேலஞ்சர் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து ATPயின் முதல் 100 இடங்களில் 98வது இடத்தைப் பெற்றுள்ளார்.
    • 1973 ஆம் ஆண்டில் ATP தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 10 இந்திய ஆண்கள் மட்டுமே முதல் 100 இடங்களை எட்டியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்