TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 25 , 2024 145 days 174 0
  • தமிழ்நாடு சட்டமன்றம் ஆனது, 1959 ஆம் ஆண்டின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை சட்டத்தின் 66வது பிரிவின் (1) வது துணைப்பிரிவின் (j) என்ற விதியை நீக்குவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியது.
    • இந்த விதியானது, “ஒரு நபர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் எந்தவொரு சமய அமைப்பின் அறங்காவலராக நியமிக்கப்படுவதற்கும், அந்தப் பொறுப்பினை வகிக்கவும் தகுதியற்றவர்" என்று கூறுகிறது.
  • எழுத்தாளரும் காங்கிரஸ் அரசியல்வாதியுமான சசி தரூர் அவர்களுக்கு, பிரான்சு நாட்டின் உயரிய குடிமை விருதான “செவாலியர் டி லா லெஜியன் டி ஹானர்” விருது சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
  • தவறான தகவல் பரவல் எதிர்ப்புக் கூட்டணி (MCA) மற்றும் மெட்டா ஆகியவை இணைந்து, வாட்ஸ்அப்பில் (புலனம் ஊடகத்தில்) பரவும் தகவல்களின் மெய்த் தன்மையைச் சரிபார்ப்பதற்கான பிரத்தியேக உதவி எண் சேவையினை அறிமுகம் செய்வதற்கான தனது திட்டங்களை அறிவித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்