TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 6 , 2024 135 days 192 0
  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் அவர்கள், ஆச்சார்யா லோகேஷ் முனியை 'உலகளாவிய சமண சமய அமைதி தூதர்' ஆக அறிவித்து கௌரவிக்க உள்ளார்.
    • அவர் அஹிம்சா விஸ்வ பாரதி மற்றும் உலக அமைதி மையத்தின் நிறுவனர் ஆவார்.
  • மூத்தப் பத்திரிகையாளர் V.N. சாமிக்கு 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது தமிழ்நாட்டில் வழங்கப்படவுள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, மிகக் குறுகிய தூர வரம்பு உடைய வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) என்ற ஏவுகணையின் இரண்டு வெற்றிகரமான சோதனைகளை நடத்தியது.
  • மூத்த இந்தியக் காவல்பணி அதிகாரியான தல்ஜித் சிங் செளத்ரி, தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய மருந்தியல் தரநிலைகளை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்த முதல் ஸ்பானிய  மொழி பேசும் நாடாக நிகரகுவா மாறியுள்ளது.
    • இந்திய மற்றும் நிகரகுவா அரசாங்கங்களுக்கிடையில் மருந்து உற்பத்தி மீதான ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்