TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 12 , 2024 129 days 206 0
  • தமிழக அரசானது 2024 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதிற்கு, பெண்ணியவாதி, ஆசிரியை மற்றும் நாவலாசிரியர் பாமா ஃபௌஸ்டினா சூசைராஜினைத் தேர்வு செய்துள்ளது.
  • சமீபத்தில் ஓய்வு பெற்ற V. பழனிகுமாருக்கு அடுத்தப்படியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி P. ஜோதி நிர்மலாசாமி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • சர்தார் ரமேஷ் சிங் அரோரா பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் சீக்கிய அமைச்சராகப் பதவியேற்று வரலாறு படைத்துள்ளார்.
  • ஜம்மு & காஷ்மீர் காவல்துறையானது ஜம்மு, சம்பா மற்றும் கதுவா (JSK) காவல் செயல் பாட்டு எல்லைகளில் பசுக் கடத்தலைத் தடுப்பதற்காக "காமதேனு நடவடிக்கையை" தொடங்கியுள்ளது.
  • இந்தியாவில் பொது மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்வையும், நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அவை எவ்வாறு உதவியாக இருக்கும் என்பதையும் ஊக்குவிக்கும் வகையில் மார்ச் 07 ஆம் தேதியன்று ஜன் ஔஷாதி திவாஸ் கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்