TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 22 , 2024 119 days 192 0
  • ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் C.P. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பதவியானது கூடுதல் பொறுப்பு ஆக வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழிசை செளந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இந்தப் பொறுப்பு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் மகளிர் பிரீமியர் லீக் (WPL) இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியானது டெல்லி கேப்பிடல்ஸ் அணியினை வீழ்த்தியது.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முப்படைகளுக்கு இடையேயான டைகர் ட்ரையம்ப் எனப்படும் இருதரப்பு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நீர் மற்றும் நிலம் சார் பயிற்சியின் தொடக்க விழாவானது, INS ஜலஷ்வா கப்பலில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்