TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 9 , 2018 2141 days 675 0
  • தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2017-18 ஆம் ஆண்டிற்கான துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய புளு அணி நடப்பு சாம்பியனான இந்திய ரெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நினைவுக் கொண்டாட்டம் தொடங்குவதை குறிக்கும் விதமாக செப்டம்பர் 29 அன்று புதுதில்லியில் மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகமானது மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டை (Mahatma Gandhi International Sanitation Convention - MGISC) நடத்தவிருக்கிறது.
  • மத்திய அரசாங்கம் மின் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளால் இயங்கும் தானூர்திகளை இயக்குவதற்கான அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. நாட்டில் மாசுபாடுகளை குறைப்பதற்கு இந்த வகையான வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • புதுதில்லியில் நடைபெற்ற இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்க உச்சி மாநாட்டின் (SIAM – Society of Indian Automobile Manufacturers) போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்