TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 12 , 2018 2138 days 682 0
  • எத்தனால், மெத்தனால், பயோ-டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) போன்ற மாற்று எரிபொருளில் இயங்கும் பேருந்துகள், வணிக ரீதியிலான கார்கள், கைவண்டிகள் போன்றவைகளை இயக்க அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • இராமேசுவரத்தில் குறைந்த விலையிலான காற்றின் தரத்தை கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த அரசாங்கத்திற்கு மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் உதவ இருக்கிறது. இந்த அமைப்பானது மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள காற்று ஆராய்ச்சி ஆய்வகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தரவுடன் விவேகானந்தா கேந்தராவில் ஏற்படுத்தப்படவிருக்கிறது.
    • ஈரப்பதம், வெப்பநிலை, கார்பன்-டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றுடன் வளிமண்டலத்தில் உள்ள PM10 மற்றும்5 நிலைகள் ஆகியவற்றின் தகவல்களை இது அளிக்கும்.
  • இந்தியாவின் பீகார் மற்றும் நேபாளம் ஆகியவற்றுக்கு இடையேயான முதலாவது பேருந்து சேவையை பாட்னாவில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் துவக்கி வைத்தார்.
  • “இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பெண்கள்” என்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் (WIFT - Women in Film and Television) போது ஐஸ்வர்யா ராய் பச்சான் கௌரவிக்கப்பட்டார்.
    • பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பெண்களின் திறமைகளை கௌரவிப்பதற்காக இவ்விருது ஏற்படுத்தப்பட்டது.
  • ஹைதராபாத் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சமீர் வெர்மா பட்டம் பெற்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி மற்றும் சிரக் செட்டி ஆகியோரும் பட்டம் பெற்றனர்.
  • கிரிகிஸ்தான் குடியரசு நாட்டுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக அசோக் அமிதாப் திமிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அஸர்பைஜான் குடியரசு நாட்டுக்கான இந்தியத் தூதுவராக வன்லால்வானா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் முதல் முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றது.
  • எதிர்கால மாற்றத்தன்மை கொண்ட செயற்கை நுண்ணறிவிற்கான சர்வதேச மையத்தை அமைப்பதற்காக நிதி ஆயோக், இன்டெல் மற்றும் டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம் (TIFR) ஆகியவை கூட்டு பணியாற்றுகின்றன.
    • இந்த கூட்டிணைவானது முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய இரயில்வே அமைச்சகமானது ரயில் சயோக் வலைப்பக்கத்தை தொடங்கியுள்ளது. இது இரயில் நிலையங்களில் பெறுநிருவனங்களுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மேம்பட்ட வசதிகளை பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதிமூலம் அமைப்பதற்கான மேடையை வழங்குகிறது.
  • பரத்பூரில் பாரம்பரிய உடைமைகளை பேணிகாப்பதற்காகவும், பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும்  மாநாடு ஒன்றை நடத்த இராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது இந்திய பாரம்பரிய தங்கும் விடுதி கூட்டிணைவு (IHHA - Indian Heritage Hotels Association) மூலம்  ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) திறன்மூலம் சுற்றுச்சூழல் சவால்களை தீர்க்க மக்களையும் மற்ற நிறுவனங்களையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “பூமிக்காக செயற்கை நுண்ணறிவு” (AI for Earth) திட்டத்திற்கு நிதி பெறுபவராக ஏழு பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
    • அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு அடுத்ததாக பூமிக்காக செயற்கை நுண்ணறிவிற்கு அதிகபட்ச கொடை பெறும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்