தெற்கு இரயில்வே நிர்வாகத்தின் சென்னைக் கோட்டத்திற்கான குளிர் சாதன வசதிகள் கொண்ட இரயில் பெட்டிகளை ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற் சாலை (ICF) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக வேண்டி வான்வழி நடவடிக்கைகளில் நன்கு கவனம் செலுத்தும் விதமாக, இந்திய இராணுவமும் இந்திய விமானப் படையும் இணைந்து கிழக்குப் படைத் தளத்தில் 'விங்கட் ரைடர்' பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டன.
"ஸ்ரஜனம்" என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட தானியங்கி உயிரி மருத்துவக் கழிவுச் சுத்திகரிப்பு நிலையம் ஆனது புது டெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான ஒத்துழைப்பைப் பெருக்குவதற்காக ஐக்கியப் பேரரசின் பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் "Defence Partnership–India" அல்லது DP-I எனப்படும் ஒரு பிரத்தியேக பிரிவானது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதாக ஐக்கியப் பேரரசு அறிவித்து உள்ளது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இஸ்ரோ ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விண்வெளிப் பயன்பாடுத் தரத்திலான SHAKTI அமைப்பு அடிப்படையிலான குறைகடத்தி சில்லினை உருவாக்கி உள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் அத்வானி, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் யஷ்வந்த் கிளப் போட்டிகளில் 36வது தேசியப் பட்டத்தையும் 10வது ஆடவர் ஸ்னூக்கர் பட்டத்தினையும் வென்றுள்ளார்.
துபாயில் சமீபத்தில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டின் (WGS) போது, 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சிறந்த M-Gov விருது விழாவில் புது டெல்லியைச் சேர்ந்த மூன்று இந்தியக் கணினி அறிவியல் மாணவர்கள் அதன் வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் (MoHUA) ஆனது, உணவு, பாரம்பரியக் கலைகள் மற்றும் புகைப்படக் கலை மூலம் இந்தியாவின் கலாச்சாரச் செழுமையை எடுத்துக்காட்டும் வகையில், 'Culinary, Crafts & Clicks – Moods & Magic - சமையல், கைவினைப் பொருட்கள் மற்றும் புகைப்படத் துணுக்குகள் – மன நிலைகள் & மாயம்' என்ற தலைப்பிலான விழாவினை அறிமுகப்படுத்தியுள்ளது.