TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 5 , 2025 28 days 83 0
  • "10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்குதல் மற்றும் அதை ஊக்குவித்தல்" என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பீகாரில் 10,000வது FPO சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தரவுகளின் படி, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமானது கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் மிகவும் அதிக வெப்பமான ஆண்டாகும்.
  • ICC தலைவர் ஜெய் ஷாவுக்கு 2025 ஆம் ஆண்டு FILA விழாவில் ஐகான் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டது.
  • டெசர்ட் ஹண்ட் 2025 எனப்படுகின்ற இந்தியாவின் ஒருங்கிணைந்த முப்படைகளின் ஒரு சிறப்புப் படைப் பயிற்சியானது ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் நடத்தப் பட்டது.
  • அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் ஆங்கில மொழியினை அமெரிக்காவின் அதிகாரப் பூர்வ மொழியாக நியமிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
  • அகில இந்திய மசாலா ஏற்றுமதியாளர்கள் மன்றத்தினால் (AISEF) ஏற்பாடு செய்யப் பட்ட 2025 ஆம் ஆண்டு சர்வதேச நறுமணப் பொருட்கள் மீதான மாநாடு (ISC) ஆனது, பெங்களூரில் 'Building the Trust Beyond the Borders: Transparency, Sustainability, Confidence - எல்லைகளுக்கு அப்பால் ஒரு நம்பிக்கையை உருவாக்குதல்: வெளிப்படைத் தன்மை, நிலைத் தன்மை, நம்பிக்கை' என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
  • இரண்டாவது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப சபை (TTC) கூட்டம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • நோபல் பரிசு பெற்றவரும் ஒரு சமூகச் சீர்திருத்தவாதியுமான கைலாஷ் சத்யார்த்தி 'Diyasalaai' எனப்படும் தனது சுயசரிதையை வெளியிட்டார்.
  • ஒரு சக்கர நாற்காலி அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தினைக் கொண்டாடச் செய்வதற்கு மார்ச் 01 ஆம் தேதியன்று சர்வதேச சக்கர நாற்காலி தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • முதலாம் உலகப் போரில் போராடிய இந்திய வீரர்களின் பெரும் துணிச்சல் மற்றும் தியாகங்களையும், இந்திய ராணுவம் தேசத்திற்கு அளித்த பெரும் பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில் மார்ச் 03 ஆம் தேதியன்று தேசியப் பாதுகாப்பு தினம் ஆனது முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்