TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 8 , 2025 25 days 68 0
  • பத்திரிகையாளர்கள் நக்கீரன் R.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதினை தமிழக முதல்வர் வழங்கினார்.
  • மனித-வனவிலங்கு மோதலைத் திறம்பட நிர்வகிப்பதற்காக, கோயம்புத்தூரில் உள்ள சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) இந்திய வனவிலங்கு கல்வி நிறுவன வளாகத்தில் ஒரு சிறப்பு மையம் நிறுவப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
  • NLC இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனமானது அதன் வளாகத்தில், 'விபத்துகளற்ற' சூழலை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் வகையில், அரண் எனப்படும் ஒரு கைபேசி சார்ந்தப் பாதுகாப்புச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • "பார்வை குறைபாடுள்ள நபர்கள் நீதித்துறையின் கீழ்நிலை பதவிகளுக்கான தேர்வில் பங்கேற்க மிகத் தகுதியுடையவர்கள்" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து குறைபாடு அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான உரிமையை ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரித்து தீர்ப்பளித்துள்ளது.
  • 404.991 லட்சம் ரூபாய் செலவில் 17 புதிய மரகதப் பூஞ்சோலை அல்லது கிராம வனப் பகுதிகளை உருவாக்குவதற்குத் தமிழக அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
    • இந்த மூன்றாம் கட்ட மேம்பாட்டுடன் சேர்த்து இங்கு கிராமங்களில் உள்ள மொத்த மரகதப் பூஞ்சோலைகளின் எண்ணிக்கையானது 100 என்ற அளவை எட்டி பசுமை தமிழ்நாடு திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படிநிலையைக் குறிக்கிறது.
  • நான்கு நாட்கள் அளவிலான 2025 ஆம் ஆண்டு உலக கைபேசி மாநாடானது (MWC) ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில், "Converge, Connect, Create" என்ற முக்கிய ஒரு கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
  • சீனாவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் லியு ஜியாகுனுக்கு 2025 ஆம் ஆண்டு பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு வழங்கப்பட்டது.
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது, மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு உதவுவதற்காக டிராகன் கோபைலட் எனப்படுகின்ற ஒரு புதிய குரல் வழி கட்டுப்பாடு கொண்ட செயற்கை நுண்ணறிவு உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்