தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா நாராயணன் (7), உலகின் மிகவும் இளம் டைக்வாண்டோ பயிற்றுவிப்பாளராக மாறி கின்னஸ் உலக சாதனையினைப் படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் 1,540 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது என்பதோடு இது கடந்த 12 ஆண்டுகளில் பதிவான மிகவும் குறைந்த ஒரு வருடாந்திர எண்ணிக்கை ஆகும்.
சென்னை மெட்ரோ இரயில் அமைப்பின் இரண்டாம் கட்டத்திற்கான மெட்ரோ ரயில் போக்குவரத்து வலையமைப்பிற்கான முதல் ஓட்டுநர் இல்லாத இரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
புது டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டு Medical Colleges Research Connect நிகழ்வில் அதன் செயல்திறனுக்காக மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி சிறப்பு விருதைப் பெற்றுள்ளது.
அறிஞரும் கோட்பாட்டாளருமான காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் 2025 ஆம் ஆண்டு ஹோல்பெர்க் பரிசை வென்றுள்ளார் என்ற ஒரு நிலைமையில் இது மனித நேயம், சமூக அறிவியல், சட்டம் அல்லது இறையியல் ஆராய்ச்சித் துறையில் நோபல் பரிசுக்கு சமமான விருதாகக் கருதப்படுகிறது.
சுரங்க அமைச்சகம் ஆனது, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்துடன் (GSI) இணைந்து கனிம இலக்கு குறித்த IndiaAI ஹேக்கத்தானைத் தொடங்கியுள்ளது.
ஹரியானாவில் உள்ள கோரக்பூர் என்ற ஒரு சிறிய நகரத்தில் 10,380 மெகாவாட் திறன் கொண்ட வட இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையம் நிறுவப்படவுள்ளது.