TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 4 , 2018 2116 days 609 0
  • நீலகிரி காவல் துறையானது பாரம்பரிய ‘குரும்பா’ ஓவியத்தை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. காவல்துறையானது அழிந்துவரும் கலை வடிவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கேரள-தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் எல்லைப்பகுதி கிராமங்களை தத்தெடுக்க உள்ளது.
  • ஹரியானா அரசானது, சூரியசக்தி துறையில் அறிவியலாளர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க இந்தியாவில் பிறந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையின் பெயரில் கல்பனா சாவ்லா ஹரியானா சோலார் விருது என்ற விருதினை உருவாக்க முடிவு செய்துள்ளது.
  • தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (TRAI – Telecom Regulatory Authority of India) இந்திய டிஜிட்டல் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என பெயர் மாற்றப்படவுள்ளது.
  • தமிழ்நாட்டின் ஏழு மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆறு முதன்மை சுகாதார மருத்துவ மையங்கள் மாநில சுகாதார சேவைகளின் மேன்மைக்கான மையத்திலிருந்து தரத்திற்கான தேசிய உத்திரவாத விருதினைப் பெற்றுள்ளன.
  • உத்திரப் பிரதேச மாநிலம் ராம் நகரில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவகமான லால் பகதூர் சாஸ்திரி ஸ்மிரிதி பவன் சங்ரஹாலேவை மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
  • மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன (FTII - Film and Television Institute of India) சங்கத்தை உருவாக்கியுள்ளது. மேலும் நடிகை கங்கனா ரனவத், பாடகர் அனுப் ஜலோதா, பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களான ராஜ்குமார் ஹிரானி மற்றும் விது வினோத் சோப்ரா ஆகியோரை மற்ற உறுப்பினர்களுடன் நியமனம் செய்துள்ளது.
    • இந்த நியமனமானது FTII-ன் தலைவராக நடிகர் அனுபம் கெர் நியமிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு வந்துள்ளது.
  • மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் இந்தியப் பழங்குடிகள் மற்றும் ட்ரைஃபெட் (Tribes India and TRIFED) அமைப்பானது ‘பஞ்ச் தந்திரா சேகரிப்பை’ (Punch Tantra Collection) தொடங்கியுள்ளது. மேலும் இந்திய பழங்குடியினரின் விளம்பரத் தூதுவராக மேரி கோம்-ஐ அது நியமித்துள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் 4 நாள் தேசிய இலக்கிய மற்றும் அறிவுசார்ந்த மாநாடான ‘லோக் மன்தன் 2018’ ஆனது (Lok Manthan 2018) துணைக் குடியரசு தலைவர் M. வெங்கையா நாயுடுவால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • வரும் 2024-ல் நடக்கவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கான பந்தயத்தில் ஒரே ஒரு மாற்று ஏலக்காரரான துருக்கியை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது. இதற்குமுன் 2006 உலக கோப்பைப் போட்டியை ஜெர்மனி கடைசியாக நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்