TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 16 , 2018 2104 days 768 0
  • புது தில்லியின் பிரகதி மைதானில் இந்திய சர்வதேச ஜவுளி கண்காட்சியானது மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணியால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR - National Commission for Protection of Child Rights) புதிய தலைவராக பிரியங்க் கானூங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் இந்த ஆணையத்தின் தலைவராக பணியாற்றுவார். சமீபத்தில் இப்பதவி வகித்த ஸ்துதி காக்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
    • குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம், 2005-ன் கீழ் 2007 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் மூலம் இயற்றப்பட்ட சட்டத்தினால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. NCPCR ஆனது தன்னாட்சி பெற்ற அரசு அமைப்பாகும்.
  • இந்தியா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான மும்முனை ஒத்துழைப்பின் கீழ் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து முதலாவது கூட்டுத் திட்டமான ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்