TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 2 , 2018 2057 days 562 0
  • சமீபத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையேயான 3-வது பேச்சு வார்த்தையானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இது இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களால் இணைந்து தலைமை தாங்கப்பட்டது.
    • 4-வது பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையானது சிங்கப்பூரில் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் திறனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்தல், எல்லை மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் வணிகங்களை எளிதாக்குதல் ஆகியவற்றிற்காக ஹாட்லைன் (Hot Line) ஒன்றை அமைக்க இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.
  • நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நேபாளத்தின் காத்மண்டுக்கு அருகில் உள்ள பக்தாப்பூரில் கட்டுமான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மூன்று நாள் கண்காட்சியை (ConMac) 2018 ஏற்பாடு செய்திருந்தன.
  • முதலாவது கடற்பரப்பு காற்றாலை முதலீட்டு மாநாடானது புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய முதலீட்டு வங்கி (European Investment Bank-EIB) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவை இந்தியா முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் காற்றாற்றல் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு ஒத்துழைப்பதாக ஒப்புக் கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்