TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 21 , 2018 2038 days 598 0
  • நியமனங்களுக்குக்கான அமைச்சரவைக் குழுவால் இடைக்கால சிபிஐ இயக்குநரான M. நாகேஸ்வர ராவிற்கு கூடுதல் இயக்குநருக்கு இணையான பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவின் புனே மாவட்ட நீதிமன்றமானது நீதிமன்ற வைப்பு, அபராதங்கள் ஆகியவற்றை மின்னணு பண வழங்கீடு முறையில் செலுத்த அனுமதித்துள்ள முதல் நீதிமன்றமாக ஆகியுள்ளது. இந்த புதிய வசதியானது சிவாஜி நகர் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில்   தொடங்கப்பட்டுள்ளது.
  • பீட்டா இந்தியா அமைப்பால் 2018 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக சோனம் கபூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக அனுஷ்கா ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
  • தமிழில் தந்தி அனுப்பும் முறையை கண்டறிந்தவரான A. சிவலிங்கம் திருச்சியில் காலமானார். இவர் 1955-ல் தமிழில் தந்தி அனுப்பும் முறையைக் கண்டறிந்து அதனைப் பொதுப் பயன்பாட்டிற்கு 1956-ல் கொண்டு வந்தார். மேலும் இவர் தமிழ் தந்தி சிவலிங்கனார் என்றும் அழைக்கப்பட்டார்.
  • சென்னைப் பெரு நகராட்சியானது, சென்னை கோட்டைக்கு அருகில் உள்ள பிரேஸர் சாலையை TNPSC சாலை என பெயர் மாற்றம் செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்