உலகளாவிய அளவில் நடனக் கலையை வளர்ச்சியுறச் செய்வதற்காக தேசிய நிருத்ய ஷிரோமணி என்ற விருதானது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட அனின்டிட்டா நியோகி அனாம் என்ற கதக் நடனக் கலைஞருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதானது, கட்டாக்கில் நடைபெறும் சர்வதேச நடனம் மற்றும் இசைத் திருவிழாவான 10-வது கட்டாக் மகோத்சவ் என்ற விழாவின் தொடக்க நாளன்று வழங்கப்படும்.
இவர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்தியக் கலைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் புரிந்த அவரின் சாதனைகளுக்காக சிறப்பு வாய்ந்த தேசிய விருதுகளான ஜெயதேவ் ராஷ்ட்ரிய புரஸ்கார் மற்றும் பிதக்தா நர்த்தகி சம்மான் போன்ற விருகளைப் பெற்றுள்ளார்.