TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 28 , 2019 2000 days 555 0
  • நாட்டுப்பற்று மற்றும் தேச கட்டமைப்பு மீதான தேசிய அளவிலான பேச்சுப் போட்டியை மத்திய அமைச்சரான ராஜ்ய வர்த்தன் ரத்தோர் தொடங்கி வைத்தார். இது இளைஞர்கள் விவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து நேரு யுவ கேந்திரா சங்கதன் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • சமஸ்கிருத மொழிச் சொல்லிருந்துப் பெறப்பட்ட “நாரி சக்தி” எனும் சொல்லானது 2018 ஆம் ஆண்டிற்கான இந்தி மொழிச் சொல்லாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு அகராதி நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பெண்களின் சக்தி (women empowerment) என்று பொருள்படும்.
  • வரலாற்று சிறப்புமிக்க திக்கி அரண்மனையானது 5 நாட்கள் நடைபெறும் 12-வது ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவை நடத்துகிறது. இந்த திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஜெய்ப்பூர் நகரில் நடைபெறும் வருடாந்திர இலக்கியத் திருவிழாவாகும்.
    • 2006-ல் தொடங்கப்பட்ட இத்திருவிழாவானது 2008 ஆம் ஆண்டிலிருந்து டீம்ஓர்க்ஸ் ஆர்ட்ஸ் (Teamwork Arts) என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்